ஒரு காட்டில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தில் ஒரு புறா ஜோடி கூடு கட்டி வாழ்ந்து வந்தது. பெண் புறா தினமும் முட்டை இடும். அதே மரத்தின் கீழ் உள்ள ஒரு பொந்து ஒன்றில் ஒரு நாகம் வாழ்ந்து வந்தது. அது தினமும் மரத்தின் மேலேறி பெண் புறா இடும் முட்டைகளைக் குடித்து விட்டு வந்து விடும். தினமும் இதனை வேதனையுடன் அந்தப் புறா ஜோடி பார்க்கும். ஆனால் அதனால் எதுவும் செய்ய இயலவில்லை. அதனால் அவை ஒரு முடிவுக்கு வந்தன. எப்படியாவது அந்தப் பாம்பைப் பழி வாங்குவது என முடிவு செய்து அதற்கான வழியை யோசித்தது. முடிவில் ஒரு வழியையும் கண்டுபிடித்து செயல்படுத்தியது.
அந்த நாட்டு அரசன் குளிக்க செல்லும்போது அந்த அரசனின் முத்து மாலையைக்
கவ்விக் கொண்டு பறந்தது. காவலர்கள் அதனைத் துரத்திக் கொண்டு வந்தனர். அது முத்து மலையை அந்தப் பாம்பு வாழும் பொந்தினுள் போட்டது. காவலர்கள் மலையை எடுக்க வந்த பொழுது பாம்பு புஷ் என சீறியது. அவர்கள் பாம்பைக் கொன்று மாலையை எடுத்துச் சென்றனர் பின்னர் அவை அந்த மரத்தை விட்டு என்றும் பிரியாமல் நெடுங்காலம் வாழ்ந்தது.

